கொளுத்திப்போட்ட பயில்வான் ரங்கநாதன்: ஆவேசத்தில் கீர்த்தி பாண்டியன்! 
                                    
                                    
                                   keerthi pandiyan speech goes viral
 
                                 
                               
                                
                                      
                                            யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள திரைப்படம் 'கண்ணகி'. இந்த திரைப்படத்தில் அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஷாலின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 
e5 என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்கை மூன் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவரை படம் வருகின்றார் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இந்நிலையில் பட குழு படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 'கண்ணகி' திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பயில்வான் ரங்கநாதன், நடிகை கீர்த்தி பாண்டியனின் வீட்டிற்குள் தான் கணவன் மனைவி சண்டை என்றால் இந்த வாரம் கணவன்-மனைவி இருவருடைய படமும் வெளியாக உள்ளது. 
இதில் எந்த படம் வெற்றி பெறும் என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு கீர்த்தி பாண்டியன், எங்கள் வீட்டிற்குள் வந்து பார்த்தீர்களா? நாங்கள் சண்டை போட்டதை. எங்களுக்குள் சண்டையும் இல்லை போட்டியும் இல்லை என ஆவேசத்துடன் பதிலளித்துள்ளார். 
 
                                     
                                 
                   
                       English Summary
                       keerthi pandiyan speech goes viral