பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு காதலை வெளிப்படுத்திய கவின், லொஸ்லியா! முதல்முறையாக வெளியான தகவல்!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இறுதி நாள்  கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 105 நாள்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் இறுதி சுற்றுக்கு நான்கு பேர் மட்டுமே தகுதி பெற்றனர்.

இந்த போட்டியில் 50 லட்சம் பரிசு தொகையையும் பிக்பாஸ் பட்டத்தையும் முகேன் தட்டி சென்றார். சாண்டி இரண்டாம் இடத்தையும், லொஸ்லியா மூன்றாவது இடத்தை பிடித்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் சக போட்டியாளர்களை சந்தித்து பேசிக்கொண்ட, மகிழ்ச்சியாக உள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் காதலர்களாக வலம் வந்த கவின் மற்றும் லொஸ்லியா சந்தித்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகவில்லை. இதனிடையே நேற்று நடைபெற்ற பிக்பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கவினும் லொஸ்லியாவும் அருகே அருகே இருந்தாலும் பேசிக்கொள்ளவில்லை என்று தான் தகவல் வெளியானது.

இந்நிலையில் லொஸ்லியா தனது காதலை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இருவரும் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. இந்த புகைப்படம் உண்மை தானா என்று தெரியவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kavin and losliya new photo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->