ஆஸ்கர் புரொமோஷனுக்கு இத்தனை கோடியா.?! ராஜமவுலி மகன் தகவல்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'. இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

மேலும், இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட், பிரகாஷ் ராஜ் மற்றும் சமுத்திரகனி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் நல்ல வசூலைப் பெற்றது. ஆஸ்கார் விருது நாமினேஷனிலும் இந்தப் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் இடம்பிடித்துள்ளது. 

இதைத்தொடர்ந்து, கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இரண்டுப் பிரிவுகளில் இடம்பிடித்தது. தொடர்ந்து. இந்தப் படத்தில், எம்.எம்.கீரவாணி இசையமைத்த 'நாட்டு நாட்டு' பாடலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து, ஆஸ்கரும் அறிவிக்கப்பட்டது. இது பல்வேறு விமர்சனங்களை பெற்ற நிலையில், இதுகுறித்து ராஜமவுலி மகன் கார்த்திகேயா பேட்டியளித்துள்ளார்.

அதில், இந்த ஆஸ்கர் விருது புரமோஷன் பணிகளுக்காக ₹.8.50 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக அவரே ஒப்பு கொண்டுள்ளார். கார்த்திக்கேயா தான் ஆர்.ஆர்.ஆர் படத்தின் புரமோஷன் பணிகளை மேற்க்கொண்டவர் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karthikeya about Oscar promotion work


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->