இது என்னடா, ராஷ்மிகாவுக்கு வந்த சோதனை.? திரையுலகம் அதிரடி முடிவு.?!
kannada cinema may ignore rashmika mandhana
கன்னட நடிகையாக அறிமுகமாகி தெலுங்கு, தமிழ் திரைகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது, இவர் விஜய் நடிக்கின்ற வாரிசு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகின்றார். இது மட்டும் அல்லாமல் அவரது நடிப்பில் புஷ்பா 2 போன்ற பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.
கன்னடா சினிமாவில் ஆரம்பித்த அவர் தற்போது பாலிவுட் வரை கலக்கி வருகின்றார். இந்திய அளவில் பிரபல நடிகையாக இருப்பவர்தான் ராஷ்மிகா மந்தனா. ஆனால் அவர் முதன்முதலில் கன்னடா சினிமாவில் தான் தனது வாழ்க்கையை துவங்கினார்.
தற்போது அந்த கன்னட சினிமா துறை அவருக்கு தடை விதிக்க முடிவெடுத்திருப்பதாக சில செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகை ராஷ்மிகா மந்தனா தான் முதன்முதலில் அறிமுகமான கன்னட திரைப்படம் குறித்து அவமரியாதையுடன் பேசினார். எனவே, தான் கடுப்பாகி கன்னட திரை உலகில் இனி அவருக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று பேச்சுக்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
kannada cinema may ignore rashmika mandhana