கமல்ஹாசன் குரலில் பாண்டியர்கள் வருகை! பொன்னியின் செல்வன் அப்டேட்!
Kamal Haasan in the voice of Pandyas
கமலஹாசனின் பிரம்மாண்ட குரலில் பொன்னியின் செல்வன் படத்தில் பாண்டியர்களின் வருகையை அதிர வைத்துள்ளார் இயக்குனர் மணிரத்தினம்.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பிரம்மாண்டமான படத்தை இயக்கியுள்ளார் மணிரத்தினம். வரும் 30ஆம் தேதி வெள்ளித்திரைக்கு வரவிருக்கிறது.
இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி,திரிஷா, ஐஸ்வர்யா ராய் உட்பட பெரிய நடிக்கர்கள் பட்டாலமே நடித்துள்ளது. இப்படம் இரண்டு பகுதிகளாக வெளிவரும் என மணிரத்தினம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெறும் பாண்டியர்கள் வருகையானது கமலஹாசனின் பிரம்மாண்ட குரலில் அமைக்கப்பட்டுள்ளது. வீரபாண்டியனின் தலையை குவிந்த ஆதித்ய கரிகாலனின் பழிவாங்க தீவிரம் காட்டிய பாண்டியர்களின் வருகை அறிமுகம் செய்துள்ளனர்.
குணச்சித்திர நடிகர் கிஷோர் - ரவிதாஸனாகவும், ரியாஸ் கான் - சோமன் சாம்பவனாகவும், வினை தேவரலானாவும், அர்ஜுன் சிதம்பரம் - வராகுணனாகவும் வாள் ஏந்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
நாளுக்கு நாள் புது அப்டேட்களை தந்து பொன்னியின் செல்வன் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர்
English Summary
Kamal Haasan in the voice of Pandyas