கோல்டன் க்ளோப் விருது வென்ற கீரவாணிக்கு இசைஞானி இளையராஜா  பாராட்டு.! - Seithipunal
Seithipunal


பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்த இயக்குனர் ராஜமௌலி. அதன் பிறகு அவர் இயக்கும் படங்கள் குறித்து எதிர்பார்ப்பு எழுந்து வந்தது.  

இதனையடுத்து இயக்குனர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜீனியர் என்டிஆரை வைத்து 'RRR' என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்கினார். மேலும், இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் அலியா பட் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2022 மார்ச் 25ம் தேதி திரையரங்குகளில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ள 'நாட்டு நாட்டு' பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. ஆஸ்கார் விருதுக்கான போட்டி பட்டியலில் 'நாட்டு நாட்டு' பாடல் உள்ள நிலையில் கோல்டன் குளோப் விருது வென்றுள்ளது.

இதனையடுத்து சமூக வலைதளங்கள் மூலம் திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இசைஞானி இளையராஜா, ‘எஸ்.எஸ்.ராஜமௌலி, கீரவாணி உங்களின் கடின உழைப்பிற்குக் கிடைத்த சரியான வெற்றி. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்’ என டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Elayaraja wishes to music director keeravani


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->