கண்கலங்கிய ரம்யா... கலங்கவைத்த அர்ச்சனா.. சேர்ந்து நொறுங்கிப்போன சுரேஷ் - பாலாஜி.!
Biggboss 29 October 2020 Promo
பிரபல தனியார் தொலைக்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியானது, தமிழில் நான்காவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. நான்காவது சீசன் வெற்றிக்காக போட்டியாளர்கள் பிக் பாஸ் இல்லத்தில் மல்லுக்கட்டிக்கொண்டு இருக்கின்றனர். முதல் நபராக பிக் பாஸ் இல்லத்தில் இருந்து நடிகை ரேகா வெளியேறினார்.
பிக் பாஸ் இல்லத்திற்குள் நடிகர் ரியோ, நடிகை சனம் செட்டி, நடிகை ரேகா, பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி அர்ஜுனன், குத்து சண்டை வீரர் சோம சேகர், கேப்ரியல்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஆர்ஜித் ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில், பிக் பாஸ் இல்லத்தை பொறுத்த வரையில் தினமும் பல சச்சரவுகள் நிலவி வருகிறது. தினமும் சண்டை, காதல் காவியங்கள், சென்டிமென்ட சம்பவங்கள் என ஒன்றரை மணிநேரம் பரபரப்பாக சென்றுவிடும். கடந்த சில நாட்களாக தொடர்ந்து வந்த பாலாஜி - அர்ச்சனா சண்டை நேற்று நிறைவுபெற்றது.
இன்று வெளியான ப்ரமோவை காணுகையில், வீட்டில் அவரவருக்கு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தினார் போல உள்ள குடும்ப உறுப்பினர்களை நினைவு கூறுவது தொடர்பாக பிக் பாஸ் போட்டி கொடுத்தார். இந்த ப்ரமோவை காணும்போதே பலரும் கண்கலங்கிய நிலையில், இன்றைய பிக் பாஸ் பெரும் சோகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைப்போன்று பாலாஜியை சுரேஷ் தனது பேரன் போல என்று குறிப்பிடவே, ப்ரோமோ காட்சிகளை பார்க்கும் போதே கண்களில் நீர் பலருக்கும் ததும்பிவிட்டது. அர்ச்சனாவை ரம்யாவும் அடுத்த அழுகையை ஏற்படுத்தி விட்டனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Biggboss 29 October 2020 Promo