பாலாவின் கதையை கேட்டு ஆடிப்போன சூர்யா.! சூர்யாவுக்கு அடுத்த படம் ரெடி.!
bala story for surya
கோலிவுட் சினிமாவில் தன்னை வருத்திக்கொண்டு நடிக்க வைக்கும் இயக்குனர்களில் ஒருவர் தான் பாலா. இவர் சேது, பிதாமகன், நந்தா மற்றும் நான் கடவுள் என வரிசையாக தொடர்ந்து முன்னணி இயக்குனராக இருக்கிறார்.
இருந்தாலும், அதன்பின் பாலா இயக்கத்தில் வெளிவந்த அவன் இவன் மற்றும் பரதேசி போன்ற படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக அந்த அளவிற்கு பாலாவுக்கு உதவவில்லை.
தற்போது பாலா சூர்யா கூட்டணி பிதாமகன் படத்தின் ஹிட்டுக்கு பிறகு 18 வருடம் கழித்து மீண்டும் சேர இருக்கிறது. மேலும், சூர்யாவின் மனைவி ஜோதிகா பாலா இயக்கிய நாச்சியார் என்கிற படத்தில் நடித்தபோது பாலா சூர்யாவுக்காக ஒரு கதையை கூறி சம்மதம் வாங்கி வைத்து இருந்தாராம்.
மொத்த கதையையும் கேட்டு விட்டு சூர்யா மிரண்டு விட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.