ஆந்திரா, தெலுங்கானா வெள்ளப்பெருக்கு! நடிகர் சிம்பு நிவாரண நிதி வழங்கியுள்ளார்! - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலம் மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவின் குண்டூர், மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் குறிப்பாக விஜயவாடா மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சிக்கலான சூழ்நிலையிலிருந்து மீண்டு வர ஆந்திரா மற்றும் தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்குத் தெலுங்கு திரையுலக நடிகர்கள் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். 

அந்த வகையில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, பவன் கல்யாண் , பிரபாஸ், மகேஷ்பாபு,  பாலய்யா, ஜூனியர் என்.டி.ஆர். அல்லு அர்ஜுன் ஆகியோர் நிவாரண நிதி அளித்து உதிவினர்.

இந்த நிலையில், தமிழ் திரையுலகில் இருந்து முதல் நபராக ஆந்திரா மற்றும் தெலுங்கானா வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கியுள்ளான் நடிகர் சிலம்பரசன்.

அதன் படி, நடிகர் சிலம்பரசன், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6 லட்சம் நிதி வழங்கியுள்ளார். அவரின் இந்த செயலை அவரது ரசிகர்கள் மற்றும் பலரும் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Andhra Telangana floods Actor Simbu has donated relief funds


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->