அவர்களுக்கு மட்டும் ஸ்பெஷலாக நன்றி சொன்ன வரலட்சுமி.! இதற்கு தானா.?!  - Seithipunal
Seithipunal


தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் படு பிஸியாக வலம் வரும் நடிகை என்றால் நடிகை வரலட்சுமி சரத்குமார் தான். கொரோனா வைரஸ் காரணமாக வரலட்சுமி நடித்த திரைப்படங்கள் ஆன்லைன் தளத்தில் வெளியாகி விட்டது. 

கடந்த மாதம் தெலுங்கில் ரவி தேஜா மற்றும் சுருதிகாசன் ஆகியோருடன் வரலட்சுமி நடித்து இருந்த கிராக் எனும் திரைப்படம் சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்தது. இதில் ஜெயம்மா என்ற கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமி நடித்து இருப்பார். 

இத்தகைய சூழலில், கடந்த வாரம் அவர் நடித்த இன்னொரு படமான நாந்தி வெளியாகியது. இதில் அல்லரி நரேஷ் ஹீரோவாக நடித்து இருப்பார். இதன் வக்கீல் கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமி நடித்து இருப்பார். 

ரசிகர்களிடம் இந்த திரைப்படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. தெலுங்கில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து வெற்றியடைந்ததைத் தொடர்ந்து தெலுங்கு ரசிகர்களுக்கு நடிகை வரலட்சுமி தன்னுடைய நன்றியை தெரிவித்து இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress varalatchumi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->