நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது பரபரப்பு புகார்: நடந்தது என்ன?
actress Saranya Ponvannan against complaint
தமிழ் சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகையான சரண்யா பொன்வண்ணன் சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.
இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீதேவி வீட்டின் கேட்டை திறந்த போது சரண்யாவின் காரை உரசுவது போல சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் சரண்யா குடும்பத்தினர் ஸ்ரீதேவியை வீடு புகுந்து மிரட்டியதாக தெரிகிறது.
![](https://img.seithipunal.com/media/crime 0221.png)
இதனை தொடர்ந்து ஸ்ரீதேவிm சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஸ்ரீதேவி மீதும் சரண்யா பொன்வண்ணன் தரப்பில் புகார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
actress Saranya Ponvannan against complaint