“பணக்காரர்கள் புதிய கார்கள் வாங்க மாட்டார்கள்!” – இதுதான் காரணமா? ஆனந்த் சீனிவாசனின் விளக்கம்! - Seithipunal
Seithipunal


ஜிஎஸ்டி குறைப்பு காரணமாக, தற்போது கார் சந்தையில் உண்மையிலேயே “பூம்” நிலை ஏற்பட்டுள்ளது. பலர் நீண்ட நாட்களாக யோசித்து வந்த கனவு காரை இப்போது வாங்கி விடுகிறார்கள். ஷோரூம்களில் கூட்டம், டெலிவரிகள், புதிய கார்களுக்கான ஆர்வம் — அனைத்தும் உச்சத்தில் தான் உள்ளது.

ஆனால் இதே நேரத்தில், பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கூறிய கருத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. அவர் கூறியதாவது — “உண்மையான பணக்காரர்கள் ஒருபோதும் புதிய கார்கள் வாங்க மாட்டார்கள்!” 

ஏன் என்றால், கார் என்பது ஒரு முதலீடு அல்ல, செலவு தான் என அவர் கூறுகிறார். கார் வாங்கிய நாளிலிருந்தே அதன் மதிப்பு குறைந்து கொண்டே போகும். “அதனால் தான் பணக்காரர்கள் எப்போதும் செகண்ட் ஹேண்ட் கார்கள் வாங்குவார்கள்,” என்று ஆனந்த் விளக்குகிறார்.

மேலும் அவர் கூறியதாவது – “கார் இன்சூரன்ஸ் வாங்கும்போது மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ் தான் சிறந்தது. இது முதல் 5 ஆண்டுகள் காருக்கான முழுமையான பாதுகாப்பை அளிக்கும். ப்ரீமியம் கொஞ்சம் அதிகமாக இருக்கும், ஆனால் அதற்கான நிம்மதி பெரியது,” எனவும் தெரிவித்தார்.

அவர் மேலும் எச்சரித்தார்: “சின்ன கம்பெனிகளில் இன்சூரன்ஸ் எடுக்காதீர்கள். பெரிய கம்பெனியில் எடுத்தால் தான் சர்வீஸ் சரியாக கிடைக்கும். இன்சூரன்ஸில் Insured Declared Value (IDV) எனப்படும் ஒரு முக்கிய விஷயம் உள்ளது. காரின் உண்மையான மதிப்பை குறைவாகச் சொல்லி இன்சூரன்ஸ் எடுத்தால் அதனால் பயன் இல்லை,” எனவும் கூறினார்.

ஆனந்த் சீனிவாசன் கூறுகையில் —“கார் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10% குறையும் என கருதி இன்சூரன்ஸ் போட வேண்டும். ரூ.20 லட்சம் காருக்காக, அடுத்த வருடம் ரூ.18 லட்சம், அதன் பிறகு ரூ.15 லட்சம் என சரியாக கணக்கிட வேண்டும்.”

 புதிய கார்கள் வாங்குவதில் மிடில் கிளாஸ் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். குடும்பத்துடன் சாலையில் செல்ல கார் தேவை என்பதே இன்றைய நம்பிக்கை. ஜிஎஸ்டி குறைப்பும் அதில் பங்காற்றியுள்ளது. ஆனால், ஆனந்த் சீனிவாசன் சொல்லும் போல, “பணக்காரர்கள் காத்திருந்து, சரியான செகண்ட் ஹேண்ட் காரை, நம்பகமான மெக்கானிக்கின் உதவியுடன் வாங்குவார்கள்.”

அதனால் தான் அவர் கூறுகிறார்:“கார் ஒரு லக்ஷரி, ஆனால் புத்திசாலித்தனமாக நடந்தால் அது தேவையற்ற சுமையாக மாறாது.”

 ஜிஎஸ்டி குறைப்பு மக்களிடையே புதிய கார் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கலாம், ஆனால் ஆனந்த் சீனிவாசனின் இந்த வாக்கியம் —
“பணக்காரர்கள் புதிய கார் வாங்க மாட்டார்கள்” — தற்போது தமிழ்நாட்டின் கார் ஆர்வலர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rich people donot buy new cars Is this the reason Anand Srinivasan explanation


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->