நீண்ட நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு.!!
nov 21 petrol price in chennai
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் இல்லாமல் இருந்தது. ஜூன் முதல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.
சென்னையில் கடந்த 59 நாட்களாக பெட்ரோல், டீசல விலையில் மாற்றம் இல்லாமல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 84.14 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.95 ரூபாய்க்கும் விற்பனையாகி வந்தது.
இந்நிலையில், இன்று காலை சென்னையில் 59 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து ரூ.84.46-க்கும், டீசல் லிட்டருக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.76.37-க்கும் விற்பனை ஆகிவருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
English Summary
nov 21 petrol price in chennai