சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்., வருமானவரித்துறை இன்று வெளியிட்ட அறிக்கை.! - Seithipunal
Seithipunal


2020 -21 ஆம் நிதியாண்டில் வருமான வரி செலுத்திய 1.87 கோடி பேருக்கு, 1.91 லட்சம் கோடி ரூபாய் திருப்பி அளித்துள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 2020 -21 ஆம் நிதியாண்டில் இதுவரை வருமான வரி செலுத்திய 1.87 பேருக்கு, 1.91 லட்சம் கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டு உள்ளதாக வருமானவரித்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது.

"நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் இன்று (10.2.2021) வரையிலான வருமான வரி செலுத்துவோருக்கான திருப்பி வழங்கல் தொகை 1,91,015 கோடி ரூபாயை, 1.87 கோடி கணக்குகளுக்கு மத்திய அரசின் நேரடி வரி வாரியம் திருப்பி வழங்கியுள்ளது.

இதில், 1,84,45,638 தனிநபர் கணக்குகளுக்கு 67,334 கோடி ரூபாயும், 2,14,935 கார்ப்ரேட் நிறுவன கணக்குகளுக்கு 1,23,680 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது" என்று வருமானவரித்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

income tax report feb 10


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->