ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!
icici bank stopped there working on sri lanka
இலங்கை செயல்பட்டுவந்த இந்தியாவைச் சேர்ந்த பிரபல தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் உரிமம் தற்போது ரத்து செய்யப்பட்டு இருக்கின்றது.
இந்தியாவைச் சேர்ந்த தனியார் வங்கியான ஐசிஐசிஐ இலங்கை, இங்கிலாந்து ஆகிய சில நாடுகளிலும் தனது கிளைகளை விரிவாக்கி நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐசிஐசிஐ வங்கி இலங்கையில் தன்னுடைய செயல்பாட்டை நிறுவத்துவதாக முடிவு செய்ததை தொடர்ந்து, அந்த நாட்டின் மத்திய வங்கி நாணய வாரியத்திடம் கோரிக்கை விடுத்து இருந்தது.
இந்த கோரிக்கையை ஏற்றுள்ள இலங்கை மத்திய வங்கி நாணய வாரியம், ஐசிஐசிஐ வங்கியின் கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கி இருக்கின்றது, இதனை தொடர்ந்து இலங்கையில் செயல்பட்டு வந்த ஐசிஐசிஐ வங்கியின் உரிமம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை கடந்த 23 ஆம் தேதி நடைமுறைப்படுத்தி இருப்பதாக மத்திய வங்கி நாணய வாரியம் தெரிவித்து இருக்கின்றது.
English Summary
icici bank stopped there working on sri lanka