அவர்களை இப்படித்தான் நீங்கள் நடத்துவதா? டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி.. !
delhi hospital case in supreme court
டெல்லியில் மருத்துவமனை குறைபாடுகளை வெளிக்கொண்டுவந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்து, இடைநீக்கம் செய்யப்பட்ட விவரம், டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்.
நீங்கள் மருத்துவர்களையும் ,ஊழியர்களையும் மிரட்ட முடியாது. மருத்துவர்களையும், ஊழியர்களையும் துன்புறுத்துவதை நிறுத்திவிடுங்கள். அவர்களை அவர்களது கடமையை செய்ய விடுங்கள்.
மருத்துவமனையின் மோசமான நிலை தொடர்பாக வீடியோ எடுத்த மருத்துவரை இடைநீக்கம் செய்ய காரணம் என்ன? டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி கேட்டுள்ளது. மருத்துவர்களையும் ஊழியர்களையும், துன்புறுத்துவதை உடனடியாக நிறுத்தி விடுங்கள்.
அவர்கள் உங்களது போராளிகள். அவர்களை இப்படித்தான் நீங்கள் நடத்துவதா? உரிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுங்கள் என டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், வழக்கு விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
English Summary
delhi hospital case in supreme court