கல்வி விழா! மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் உரையாடிய விஜய்!
Education Festival Vijay interacts with differently abled students
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10, 12-ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டி, பரிசளித்து வருகிறார். இதில் இந்த ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 3 கட்டங்களாக நடக்கவுள்ளது. முதல் கட்ட பரிசளிப்பு விழா மாமல்லபுரத்திலுள்ள தனியார் ஓட்டலில் இன்று நடக்கிறது.

இதில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு வைர கம்மலும், மாணவருக்கு வைர மோதிரமும் வழங்கப்படவுள்ளது. 2, 3-ம் இடங்களை பிடித்தவர்களுக்கு தங்க நாணயம் வழங்கப்படவுள்ளது. அவ்வகையில், 600 மாணவ-மாணவிகளுக்கு தங்க நாணயங்கள் வழங்கப்பட இருக்கிறது.
இதில் முதல் கட்ட பரிசளிப்பு விழாவில், நாகப்பட்டினம், கடலூர்,சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, சிவகங்கை, திண்டுக்கல், திருவள்ளூர், தேனி, புதுக்கோட்டை, பெரம்பலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட 88 சட்டமன்ற தொகுதிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பங்கேற்கிறார்கள்.
இந்நிலையில் கல்வி விருது வழங்கும் விழாவில் பங்கேற்க சென்னை நீலாங்கரையிலுள்ள வீட்டில் இருந்து த.வெ.க. தலைவர் விஜய் புறப்பட்டு மாமல்லபுரத்தில் விழா நடைபெறும் ஓட்டலுக்கு வந்தார்.
இதில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரங்கிற்குள் நுழைந்த விஜய், அங்கு முன்பகுதியில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் அமர்ந்து அவர்களுடன் சிறிதுநேரம் உரையாடினார்.இதைத்தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதையடுத்து த.வெ.க. தலைவர் விஜய் உரையாடுகிறார்.
English Summary
Education Festival Vijay interacts with differently abled students