பெரு | தீயணைப்பு வாகனத்தின் மீது விமானம் மோதியதில் 2 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


பெருவில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தீயணைப்பு வாகனத்தின் மீது மோதியதில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து LATAM ஏர்லைன்ஸ் விமானம் 102 பயணிகளுடன் புறப்பட்டது. அப்பொழுது விமானம் ஓடு பாதையில் இருந்து மேலே எழும்ப வேகமாக சென்றபோது ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது விமானம் மோதியது. 

இதனால் ஓடு பாதையில் விமானம் தீப்பொறிகள் பறந்தபடியும், கரும்புகை வெளியேறியவாறும் பல அடி தூரம் சென்று நின்றது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து விமானத்தில் எரிந்த தீயை அணைத்தனர். 

மேலும் விமானத்துக்குள் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்களை பத்திரமாக மீட்டனர். இருப்பினும் விமானம் தீயணைப்பு வாகனத்தில் மோதியதில் தீயணைப்பு படையை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 killed when plane crashes into fire truck in peru


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->