திருச்சி விமான நிலையத்தில் குவிந்த போலீசார்! பரபரப்பில் பயணிகள்.! - Seithipunal
Seithipunal



திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

இதை தவிர உள்நாட்டு விமான சேவைகளாக ஹைதராபாத், பெங்களூர், சென்னை போன்ற நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகிறது. 

இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் பயணிகள் அதிக அளவில் பயணிக்கின்றனர். இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை முகநூல் பகுதியில் தனிநபர் ஒருவர், திருச்சி விமான நிலையத்தில் குண்டுவெடிக்க இருப்பதாகவும் நான்கு இடங்களில் குண்டு வைத்திருப்பதாகவும் தகவல் அனுப்பியதாக தெரிகிறது. 

இதனை அறிந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைத்து விமான நிலைய முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

பயணிகளின் வாகனங்கள் மற்றும் அவர்களது உடைமைகள் என தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டது. இதனால் திருச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy airport bomb treat


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->