#மதுரை || மஞ்சுவிரட்டு போட்டியில் காளை குத்தி இளைஞர் பலி.!!
Youth died in Madurai Manju virattu
தமிழகத்தில் மாட்டுப்பொங்கலை முட்டு முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் மதுரை மாவட்டம் வெளியூர் பத்தியில் நடந்த மஞ்சுவிரட்டு போட்டியின் போது காளை குத்தியதில் இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சுவிரட்டு போட்டியின் போது பார்வையாளராக அமர்ந்திருந்த இளைஞரின் இடது பக்க மார்பில் காளையில் கொம்பு குத்தியதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
English Summary
Youth died in Madurai Manju virattu