இரவில் வீடியோ கால், ஆபாச பேச்சு! விவாகரத்தான பெண்ணுக்கு செல்போனில் பாலியல் தொல்லை! ஓபிஎஸ் மகன் மீது பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி ரவீந்திரநாத் செல்போனில் பாலியல் தொல்லை கொடுப்பதாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த காயத்ரி தேவி என்பவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் "எங்கள் குடும்பத்தினரும் ஓ.பன்னீர் செல்வம் குடும்பத்தினரும் நண்பர்களாக பழகி வந்தோம். ஓ.பி.ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தி எனக்கு தோழி தான். ஆனந்தியின் மற்றொரு தோழியான மலருடன் ஓ.பி ரவீந்திரநாத்திற்கு தொடர்பு உள்ளது.

நான் குடும்ப பிரச்னை காரணமாக எனது கணவரை 2020ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டேன். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் ரவி (ஓபிஎஸ் மகன்) அண்ணாவின் போனில் இருந்து பேசிய ஒருவர் ரவீந்திரநாத் உங்கள் மீது ஆர்வமாக உள்ளார் என பேசினர். நான் அவரை அண்ணனாகவும், ஓபிஎஸ் அவர்களை அப்பாவாகவும் பார்க்கிறேன்.

கடந்த மார்ச் 31 ஆம் தேதி இரவு ஓ.பி ரவீந்திரநாத் எண்ணில் இருந்து மிஸ்டு கால் வந்தது. அதனைத் தொடர்ந்து மறுநாள் ஏப்ரல் 1ம் தேதி எனக்கு போன் செய்து கிட்டத்தட்ட அரை மணி நேரம் நன்றாக பேசியவர், ஒரு கட்டத்திற்கு மேல் ரொம்ப ஆபாசமாக பேசத் தொடங்கிவிட்டார். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். மேலும் அவர் என்னை கல்யாணம் செய்து கொள்வதாக கூறியதால் நான் போன் எண்ணை கட் செய்துவிட்டேன்.

ஆபாசமாக வீடியோ காலில் வா என அழைத்துக் கொண்டே இருந்தார். அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் வித்தியாசம் தெரியாதா? எந்த மாதிரியான எண்ணத்தில் அவர் வீடியோ கால் வர சொன்னார் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆண்கள் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வதற்கு இதை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

ஓபி.ரவீந்திரநாத்திற்கு பெண் உள்ளது. அவர்களுக்கெல்லாம் இது போல் போன் வந்தால் அவர்கள் விட்டுவிடுவார்களா? இது குறித்து ரவீந்திரநாத் மனைவியிடமும் ஏற்கனவே சொல்லி இருந்தேன். ரவீந்திரநாத் மன்னிப்பு கேட்காவிட்டால் நான் மீடியாவிடம் செல்வேன் என கூறியதால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்க தொடங்கினர்.

கடந்த நவம்பர் மாதத்தில் ஓபிஎஸிடமும் சொல்லி இருந்தேன். ஓபிஎஸிடம் பேசும் போது, நான் சொல்வதை கேட்கும் நிலையில் ரவீந்திரநாத் இல்லை, அம்மாவின் திதிக்கு கூட வரவில்லை ஓபிஎஸ் என்று கூறினார். அவரின் நண்பர் முருகன் என்பவரும் என்னை மிரட்டுகிறார். ஓ.பி ரவீந்திரநாத் இரவு முழுவதும் அழைத்த வீடியோ கால்கள் எனக்கு ஆதாரங்களாக உள்ளது. இதனை டிஜிபியிடம் புகாராக அளிக்க உள்ளேன்" என காயத்ரி தேவி பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young woman complaint against OPS son OPR for sexual harassment


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->