வீடு புகுந்து இளம்பெண் கடத்தல்.! ஆசை வார்த்தை கூறி கடத்திய மர்ம நபருக்கு போலீஸ் வலை வீச்சு.!!
வீடு புகுந்து இளம்பெண் கடத்தல்.! ஆசை வார்த்தை கூறி கடத்திய மர்ம நபருக்கு போலீஸ் வலை வீச்சு.!!
தமிழகத்தில், பல இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்து வருகின்றன. இதனைத் தடுக்க மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்தாலும், அதனை பொருட்படுத்தாமல், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளை தொடர்ந்து செய்து கொண்டே வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், மதுரையில் ஒரு பெண்ணை வீடு புகுந்து கடத்திய ஒரு சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மதுரை மாவட்டம், டி.ராமநாதபுரம் அருகே உள்ள திருமாணிக்கம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நாகன் இவருக்கு வயது 44. இவரது மகள் சிவரஞ்சனி, 18 வயது நிரம்பிய இவர் அங்குள்ள தனியார் மில்லில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்த சிவரஞ்சனியை மர்ம நபர் ஒருவர், ஏதோ ஆசை வார்த்தைகளை கூறி, கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து நாகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை கடத்திச் சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
young girl kidnapped from madurai