சென்னையில் மதுக்கடையை சுக்குநூறாக உடைத்தெறிந்த பெண்கள்! - Seithipunal
Seithipunal


சென்னை பல்லாவரம் அருகே திருநீர்மலை சர்வீஸ் சாலையில் உள்ள அம்மன் கோயில் அருகே புதிதாக மதுக்கடை திறக்க இரவு பகலாக வேலை நடந்து வந்துள்ளது. இந்த புதிய மதுக்கடைக்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இதை காதில்  வாங்காத அரசு அதிகாரி, நேற்று இரவு மது பாட்டில்களை லாரி மூலம் கொண்டு வந்து கடையில் இறக்கி கொண்டு இருந்தார். 

தகவல் அறிந்து வந்த அந்த பகுதி மக்கள், அந்த அரசு அதிகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அதிகமாகவே அந்த பகுதி பொதுமக்கள், மது பாட்டில்களை எடுத்து உடைக்க ஆரம்பித்தனர். மேலும் கடையின் உள்நுழைந்து அங்கிருந்த பொருட்களையும் உடைத்தெறிந்தனர். 

Related image

பொது மக்களின் இந்த திடீர் தாக்குதலை பார்த்து, பயந்து போன அந்த அரசு அதிகாரிகள், இங்கிருந்தால் நமக்கும் அடி விழுமோ என தப்பித்து ஓடி வந்து, சங்கர் நகர போலீசாரிடம் புகார் அளித்தனர். சம்பவ இடத்திருக்கு வந்த போலீசார், அங்கிருந்த 16க்கும் மேற்பட்ட பெண்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women who broke loose liquor in ChennaI


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->