கடலில் குளித்தபோது பரிதாபம்.! ராட்சத அலையில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


திருவெற்றியூர் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

திருவொற்றியூர் பி.சதானந்தபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகன் ஹரிஷ் (16) தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவரது அண்ணன் சந்துரு (20), கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் நேற்று மதியம், நண்பரான கல்லூரி மாணவர் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (19) என்பவருடன் திருவெற்றியூர் கடலில் குளித்துள்ளனர்.

அப்பொழுது திடீரென வந்த ராட்சத அலையில் சிக்கி மூன்று பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதை எடுத்து இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதியில் இருந்தவர்கள் மற்றும் மீனவர்கள் ஹரிஷ் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் இரண்டு பேரும் வரு வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருவொற்றியூர் தீயணைப்பு வீரர்கள் சிறப்பு படகு மூலம் அலையில் சிக்கி மாயமான சந்துருவை தேடினர். ஆனால் அவர் கிடைக்காத நிலையில், திருவொற்றியூர் போலீசாருடன் இணைந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் கடலோரக் காவல் படையினர் தொடர்ந்து சந்துருவை கடலில் தேடி வந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

While bathing in the sea 3 students were killed in the wave


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->