லாரி கவிழ்ந்து விபத்து: 75 செம்மறி ஆடுகள் பலி! போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம், கீழ்வேளூர் பகுதியில் செம்மரி ஆடுகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி இன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 75க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் பலியாகின. 

சிவகங்கை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கு சொந்தம் 200 செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக கீழ்வேளூர், மணலூர் கிராமத்திற்கு லாரியில் முயற்சிக்கொண்டு சென்று உள்ளனர். 

அப்போது திடீரென லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் காயம் இன்றி உயிர் தப்பினார். 

இருப்பினும் 75 கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் பலியாகின. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ. 10 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Truck Overturned Accident 75 Sheep Killed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->