டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் பந்துவீச்சு தேர்வு.! - Seithipunal
Seithipunal


டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் பந்துவீச்சு தேர்வு.!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு பிரிமீயர் லீக் என்று அழைக்கப்படும் டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்தப் போட்டி நகரத்தில் உள்ள வீரர்கள் மட்டுமின்றி, கிராமப்புற அளவிலான திறமையான வீரர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு வலுவான ஒரு அடித்தளத்தை அமைத்து கொடுக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.

அதனால், இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை வெற்றிகரமாக நடத்தப்பட்ட 6 சீசன்களில் அதிகபட்சமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 முறை கோப்பையை வென்றுள்ளது.

இதில் கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டி மழையால் பாதியிலேயே ரத்தானதால் கோவை கிங்சுடன் இணைந்து கோப்பையை பகிர்ந்து கொண்டது. அதுமட்டுமல்லாமல், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் மதுரை பாந்தர்ஸ் உள்ளிட்ட அணிகள் தலா ஒரு முறை கோப்பையை கையில் ஏந்தியுள்ளது. 

இந்த நிலையில், ஏழாவது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று கோயம்புத்தூரில் உற்சாகமாகத் தொடங்கியுள்ளது. இந்த முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் உள்ளிட்ட அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் திருப்பூர் தமிழன்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tnpl match tirupur thamizhans toss win and choose bouling


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->