ராட்சத அலையில் சிக்கிய 3 மாணவர்களின் உடல் மீட்பு.! - Seithipunal
Seithipunal


நேற்று மாமல்லபுரம் கடகரைக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து கல்லூரி மாணவர்கள் 40 பேர் 2 குழுக்களாக நேற்று மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தனர். அங்கு 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடலில் இறங்கி குளித்த போது கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. 

இதில், 10 மாணவர்களை ராட்சத அலை கடலுக்குள் இழுத்து சென்றது. இதைப்பார்த்த சக மாணவர்கள் மீனவர்களின் உதவியுடன் ஐந்து பேரை மீட்டனர். மீதமுள்ளவர்களில் ஒருவரின் உடல் சில நிமிடத்தில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் கடலில் மாயமான 4 மாணவர்களின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கடல் அலையில் சிக்கி மாயமான 3 பேரின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. சேஷா ரெட்டி, மோனிஷ் மற்றும் பெத்துராஜ் பிரபு ஆகியோரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாணவரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, கரை ஒதுங்காத தன்னுடைய நண்பனின் புகைப்படத்தை வைத்து கொண்டு கடற்கரையில் இரண்டு நாட்களாக ஊருக்கு செல்லாமல் அவரது நண்பர்கள் காத்திருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three students rescue in mamallapuram sea


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->