தெலுங்கானா விரைந்த தமிழிசை சவுந்தரராஜன்! எதற்காக தெரியுமா?
Tamilisai Soundararajan Telangana campaign issue
தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் 10 நாட்கள் தெலுங்கானா மாநிலத்தில் பிரசாரம் செய்ய உள்ளார்.
இதற்காக அவர் ஹைதராபாத் புறப்பட்டுள்ளார். முன்பாக தெலுங்கானா மாநிலத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநராக பணியாற்றி வந்தார்.
அரசு திட்டங்கள் மற்றும் மக்களை நேரடியாக சந்திப்பதில் அவர் தீவிரம் காட்டி வந்தார். மேலும் தெலுங்கானாவில் தமிழிசை சௌந்தரராஜனுக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதால் மேலிட உத்தரவின் பெயரில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 மக்களவை தொகுதியிலும் பிரசாரம் செய்ய உள்ளார்.
ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் நடிகை குஷ்பூ, பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் விதமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கிடையே வெளி மாநிலங்களில் இருந்தும் முக்கிய பிரமுகர்கள் பா.ஜ.கவுக்கு ஆதரவு திரட்டுவதால் பா.ஜ.கவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
English Summary
Tamilisai Soundararajan Telangana campaign issue