அடப்பாவி! இதைத்தான் இவ்வளவு நாள் வளர்த்தியா? அதிர்ந்து போன வீட்டின் உரிமையாளர்! சென்னையில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை அடையாறில் அருகே உள்ள ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் ஸ்ரீராம் என்பவருக்கு சொந்தமான வீட்டில், எட்வர்ட் என்பவர் வாடகைக்கு குடியிருந்துள்ளார். அடிக்கடி ஸ்ரீராம் தனது வீட்டை பார்க்க வருவது வழக்கம்.

கடந்த 3 மாதமாக எட்வர்ட் வீட்டில் மிகவும் கவனமாக பூந்தொட்டியில் செடி வளர்ப்பதை பார்த்த ஸ்ரீராம், இது என்ன செடி என்று கேட்டுள்ளார். அதுக்கு எட்வர்ட் இது மூலிகை செடி என்று கூறியுள்ளார். மேலும் அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் அருமருந்து என்று கூறியுள்ளார்.

ஆச்சரியபட்ட ஸ்ரீராம், எட்வர்ட் இல்லாத நேரம் பார்த்து அதில் ஒரு செடியை எடுத்துவந்து தன் மனைவியிடம் காண்பித்து மகிழ்ந்துள்ளார். அந்த செடியை பார்த்ததும் அதிர்ந்து போன ஸ்ரீராமின் மனைவி, ''இது கஞ்சா செடிங்க'', எனச்சொல்ல அதிர்ச்சில் உறைந்துபோன ஸ்ரீராம். போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து போலீசார் எட்வர்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

this what you have grown up so long The owner of the house stunned


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->