தி.மலையில் ரஷ்ய இளம் பெண் பாலியல் பலாத்காரம்.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவது பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நடைபெறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வடமாநிலங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், மத்திய அரசு மரணதண்டைக்கு உண்டான சட்டத்தை இயற்றியது. இருந்தும் இந்த குற்ற சம்பவங்கள் குறைந்த பாடு இல்லை. 

இந்நிலையில், ரஷ்ய நாட்டை சேர்ந்த அலீனா (22) என்ற இளம் பெண், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஆசிரமங்களில் கற்றுத்தரப்படும் தியான முறை பற்றி ஆய்வு செய்வதற்காக திருவண்ணாமலைக்கு கடந்த 12 ஆம் தேதி வந்துள்ளார்.

விசிறி சாமியார் ஆசிரமத்திற்கு பின்புறம் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி தொடர்ந்து ஆய்வு செய்து வந்தார் அலீனா. நேற்று (16.07.2018) காலை அந்த தனியார் விடுதி ஊழியர்கள் அலீனா ரூமை சுத்தம் செய்ய வந்துள்ளனர். அப்போது அலீனா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதனையடுத்து விடுதி ஊழியர்கள் அலீனாவை ரகசியமாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். மருத்துவ பரிசோதனையில் அவர் கற்பழிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனால், அந்த தனியார் மருத்துவமனை அலீனாவுக்கு சிகிச்சை அளிக்க முடியாது என மறுப்பு தெரிவிக்கவே, இதையடுத்து, அலீனாவை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RUSSIAN GIRL SEXUALLY ABUSED


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->