கணவர் இல்லாத நேரம்.. கள்ளக்காதலனை வீட்டுக்குள் அழைத்து இளம்பெண் ஜாலி.. 3 பிள்ளைகளை தவிக்கவிட்டு ஓட்டம்.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சிக்கு அருகில் அமைந்துள்ள குறிஞ்சி நகரை சேர்ந்த 35 வயது இளம்பெண் ஒருவர் திருமணமாகி தனது 3 பெண் குழந்தைகள் மற்றும் கணவருடன் வசித்து வந்துள்ளார். குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாக அவர் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். 

அந்த கம்பெனியில் வேலை செய்து வந்த ஒரு இளைஞருடன் பெண்மணிக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்களது நட்பு கள்ளக்காதலாக சிறிது நாட்களில் உருமாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து நெருக்கமாக பழகி தங்கள் உறவை வலுப்படுத்தி வந்தனர். மேலும், அந்தப் பெண் வீட்டில் கணவர், குழந்தைகள் இல்லாத நேரத்தில் தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து இருவரும் நெருக்கமாக இருந்தனர். 

இளைஞர் அடிக்கடி வீட்டிற்கு வந்து போகும் விஷயம் அக்கம் பக்கத்தினர் மூலம் கணவருக்கு தெரியவந்து மனைவியை கண்டித்துள்ளார். மனைவியின் இந்த செயலால் வீட்டில் சண்டை, சச்சரவு ஏற்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில், வேலைக்கு சென்ற அந்த பெண் தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளார். 

மனைவியை காணாத கணவர் அங்கும், இங்கும் தேடி அலைந்துள்ளார். ஆனால், எங்கு தேடியும் அந்த பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அந்த கணவர் காவல் நிலையத்திற்கு சென்று தனது மனைவியை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் அந்த பெண்ணையும் அவரது கள்ளக்காதலனையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pollachi women illegal affair and Running with her boyfriend


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->