விபத்தில் மூளை சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம் - 5 பேர் மறுவாழ்வு.!  - Seithipunal
Seithipunal


விபத்தில் மூளை சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம் - 5 பேர் மறுவாழ்வு.! 

உலகம் முழுவதும் மூளை சாவு அடைந்தவர்களின் உடலுறுப்புகள் தானம் செய்யப்படுவது அதிகமாக உள்ளது. இந்த உடலுறுப்புகளின் மூலம் ஏராளமானோர் மறுவாழ்வு அடைந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், உடலுறுப்பு தானம் என்று முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. 

இதில் பொதுமக்கள் தங்கள் உடலுறுப்புகளை உடல் தானம் செய்வதாக விண்ணப்பித்து வருகின்றனர். அந்தவகையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், கடந்த வாரம் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். 

இதையடுத்து அவர், சென்னையில் உள்ள எம் ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவர் திடீரென மூளைச்சாவு அடைந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அதன் படி, அவரது நுரையீரலை அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதியவர் ஒருவருக்கு மருத்துவர்கள் பொருத்தியுள்ளனர்.

மேலும், அந்த நபரின் கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் இதய வால்வுகள் உள்ளிட்ட உறுப்புகள் மற்ற மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நான்கு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைவரும் மறுவாழ்வு அடைந்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

organs donate to five peoples in chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->