தமிழகத்திற்கு வருகிறது புதிய புயல்! புயலால் தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்!!
தமிழகத்திற்கு வருகிறது புதிய புயல்! புயலால் தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்!!
அடுத்து வரும் நாட்களின் தமிழகத்தில் வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என வானிலை ஆராய்ச்சியாளர் செல்வகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
தெற்கு மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை 2018 டிசம்பர் 12 புதன்கிழமை அன்று தாழ்வு மண்டலமாக மாறி, டிசம்பர் 13 வியாழக்கிழமை அன்று பெத்தாய் புயலாகி, டிசம்பர் 14 -ல் தீவிர, அதிதீவிர புயலாக மாறி டிசம்பர் 15 சனிக்கிழமை அதிகாலை தமிழக கடற்கரையை ஒட்டி வரும்.
டிசம்பர் 15ல் நாகப்பட்டினம் முதல் திருவள்ளூர் மாவட்டம் வரை கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் அதாவது நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், புதுச்சேரி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 15 முதல் தொடர் கனமழை பெய்யும்.
திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை இருக்கும்.
பிற மாவட்டங்களில் ஆங்காங்கே லேசான முதல் மிதமான மழை பெய்யும்.
English Summary
New Cyclone In Tamilnadu : Rain Update