தாய் கைது! போலீசாருக்கு மகன் கொடுத்த அதிர்ச்சி! பல்லடம் அருகே பரபரப்பு!
தாய் கைது! போலீசாருக்கு மகன் கொடுத்த அதிர்ச்சி! பல்லடம் அருகே பரபரப்பு!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னியகவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி தெய்வானை. இவர்களது மகன் அசோக்குமார் (24). கூலித் தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி(20). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது.
அசோக்குமார் அவரது மனைவி புவனேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அசோக்குமார் தன் மீது சந்தேகப்படுவதாக புவனேஸ்வரி பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, போலீசார் அசோக்குமாரை விசாரிக்க சென்றபோது அவர் இல்லாததால் தாய் தெய்வானையை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
தகவல் அறிந்த அசோக்குமார், நேற்று மாலை பல்லடம் காவல் நிலைய வளாகத்தில் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டு, பற்றி எரியும் நெருப்புடன் காவல் நிலையத்திற்குள் ஓடி உள்ளார். இதைப்பார்த்த பெண் காவலர் ஒருவர், காவல் நிலைய கதவை மூட முயன்றார்.
அதற்குள், அசோக்குமார், காவல் நிலைய வாசலில் சுருண்டு விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற பெண் காவலர் செவ்வந்திக்கு கையில் தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு இருந்தவர்கள் அசோக்குமாரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Mother arrested Shocking son to police