காசிமேட்டில் கடலில் மிதந்த ஆண் சடலம் - கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை.!! - Seithipunal
Seithipunal


காசிமேட்டில் கடலில் மிதந்த ஆண் சடலம் - கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை.!!

சென்னையில் உள்ள காசிமேட்டில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கு மீனவர்கள் வழக்கம் போல் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது கடலில் ஆண் சடலம் ஒன்று மிதந்துள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் சம்பவம் குற்றிது காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி போலீசார்  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடலில் மிதந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், கடலில் பிணமாக கிடந்தவர், காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்த சுரேந்தர் என்பது தெரிய வந்தது. மேலும், இவர் கடலில் மீன்பிடிக்க செல்வதற்காக நள்ளிரவு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அப்போது வார்ப்பு பகுதியில் நிலைதடுமாறி கடலில் தவறி விழுந்து சுரேந்தர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man body recovered in chennai kasimedu sea


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->