தமிழ்நாட்டை குளிர்வித்த கோடைமழை.!! பொதுமக்கள் மகிழ்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் கொளுத்துவதால் சுமார் 100 டிகிரி பாரன்ஹிட்டுக்கு மேல் வெப்பநிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வரும் இத்தகைய சூழலில் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்திருப்பது பொதுமக்களை மகிழ்ச்சியில் நடத்தி உள்ளது. 

அதன்படி திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது திருத்துறைப்பூண்டி, மாங்குடி, மாவூர், கொக்கைமாடபுரம், பாமணி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துள்ளது. மேலும் கொரடாச்சேரி, கூத்தநல்லூர், கமலாபுரம், கொட்டாரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது.

அதேபோன்று நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. வேதாரண்யம், தேத்தாக்குடி, ஆதனூர், ஆயக்காரன்புலம், ஆகிய பகுதிகளில் மழை பெய்துள்ளது. இந்த திடீர் மழையின் காரணமாக வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Light rain in Thiruvarur and Nagapattinam


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->