#BREAKING || தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடை உண்டா? இல்லையா? சற்றுமுன் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal



தமிழகத்தில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 16-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. 

தற்போது தமிழ்நாட்டில் கொரோனா - ஒமைக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பொது மக்கள் நலன் கருதி தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாளை  ஞாயிற்றுக்கிழமை (23-1-2022) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முழு ஊரடங்கு நாளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும் என்றும், தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கின் போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்படும் என்று உறுதியாகிறது.

இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ செய்தி வராததால், ஒருவேளை நாளை டாஸ்மாக் கடை திறந்து இருக்கோமோ என்ற குழப்பம் நிலவி வந்தது.

இந்நிலையில், சற்றுமுன் அதிகாரபூர்வமாக நாளை ஞாயிற்றுக்கிழமை (23-1-2022) தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JAN 23 SUNDAY LOCKDOWN TASMAC SHOP Closed


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->