#Breaking : தமிழர்களின் வீர விளையாட்டு ஏறு தழுவுதல், போட்டி நடைபெறும் தேதிகள் அறிவிப்பு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!!
Jallikattu Game inTN GO
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன. இதற்காக, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் தயார் செய்து வருகின்றனர்.
காளைகளுக்கு, மண் குவியலில் குத்துதல், ஓட்டம், நீச்சல் பயிற்சி, மாதிரி வாடி வாசல் அமைத்து திறந்து விடுதல் போன்ற பயிற்சிகளையும் உரிமையாளர்கள் கொடுத்து வருகின்றனர். மதுரை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதையடுத்து தமிழகத்தில் மாவட்டவாரியாக ஜல்லிக்கட்டு போட்டிக்கான அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதன் படி வரும் 15ம் தேதி - அவனியாபுரம் , 16ம் தேதி - பாலமேடு, 17ம் தேதி - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான தேதிகள் அறிவித்து அதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, தச்சங்குறிச்சியில் 14ஆம் தேதி, வடமலை புதூரில் 18ஆம் தேதி, கீழப்பனையூரில் 19ஆம் தேதி, விராலிமலையில் 20ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது.