குமரியில்., மாணவியை நாள் முழுவதும் கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய கொடூரம்.!! வெளியான அதிர்ச்சி தகவல்.!!
in kanniyakumari girl kidnapped and rapped by her boy friend like pollachi issue
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலையை அடுத்துள்ள பகுதியை சார்ந்தவர் நிதின். அதே பகுதியை சார்ந்த 11 ம் வகுப்பு பயின்று வரும் மாணவியுடன் நட்பு வட்டாரத்தில் பழகி வந்துள்ளனர். கடந்த 23 ம் தேதியன்று நிதின் தனது தோழியிடம் இரு சக்கர வாகனத்தில் சென்று வரலாம் என்ற ஆசையை வளர்த்துள்ளார். இதனை கவனித்து வாகனத்தில் செல்ல விருப்பம் தெரிவித்ததை அடுத்து., உடனடியாக இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளனர்.
தனது குழந்தை நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை அவருக்கு தெரிந்த இடமெல்லாம் தேடி அலைந்துள்ளனர். அந்த சமயத்தில் இவர்கள் இருவரும் வாகனத்தில் செல்வதை அங்குள்ள அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக இது குறித்த தீவிர விசாரணையில் ஈடுபட துவங்கினர்.
அந்த விசாரணையில்., நிதினின் அலைபேசி எண்ணை அறிந்து தேடலை துவங்கினர். அந்த தேடலில் அலைபேசி எண்ணானது தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் வல்லநாடு அருகேயுள்ள பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை காவல் துறையினர் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்ததில் மாணவியை அங்குள்ள ஒதுக்குபுறமான இல்லத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
அந்த நேரத்தில் நிதினுடன் 17 வயதுடைய சிறுவனும் இருந்துள்ளார். அவர்களை கைது செய்த காவல் துறையினர்., சிறுமியை மீட்டு அழைத்து வந்தனர். பின்னர் சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுமி கூறியதை கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். சம்பவத்ததன்று இருசக்கர வாகனத்தில் நீண்ட தூரத்திற்கு பயணம் செய்யலாம் என்று கூறிய நிலையில்., இடையிலேயே 17 வயதுடைய சிறுவன் எறியுள்ளான்.
பயணத்தின் இடையிலேயே தனது நண்பரின் இல்லத்திற்கு சென்று சிறு ஓய்வெடுத்துவிட்டு செல்லலாம் என்று கூறி., தனி இல்லத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பலாத்காரம் செய்ததை வீடியோ காட்சிகளாக பதிவு செய்து விட்டு., பின்னர் நாள் முழுவதும் பாலியல் துன்புறுத்தலுக்கு மாணவியை உள்ளாகியுள்ளனர்.
இந்த கொடூரம் அரங்கேற நிதினின் உறவினர் ஒருவர் உதவியுள்ள நிலையில்., தலைமறைவான அவரை கவலை துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்., இது தொடர்பான பிரச்சனையில் மாணவிகள் சிக்காமல் இருப்பதற்கு நண்பர்களுடன் வெளியே செல்லும் பழக்கத்தை முன்னெடுத்ததே காரணம் என்று காவல் துறையினர் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
English Summary
in kanniyakumari girl kidnapped and rapped by her boy friend like pollachi issue