4 வயது குழந்தை பள்ளி பேருந்தில் மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம்.! வெளியான பகீர் உண்மை.!! கொந்தளித்த பெற்றோர்கள்.!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் காரமடை அருகிலுள்ள பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் காரமடை சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் பயின்று வருகின்றனர். 

இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் பள்ளி பேருந்துகளில் வந்து செல்லும் வழக்கத்தை வைத்துள்ளனர். அந்த வகையில்., இப்பள்ளியில் எல்.கே.ஜி பயிலும் நான்கு வயதுடைய சிறுமி., பள்ளி பேருந்தில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமானது வெளிவந்துள்ளது. 

பேருந்தில் வைத்து சிறுமிக்கு மயக்க ஊசியை செலுத்தி பாலியலை பலாத்காரம் செய்துள்ளனர். இந்த விஷயம் குறித்து சிறுமி வீட்டிற்கு சென்றவுடன் தனது பெற்றோர்களிடம் தெரிவிக்கவே., இதனை கேட்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர். 

உடனடியாக இந்த விஷயம் குறித்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் செய்த நிலையில்., புகாரை ஏற்ற காவல் துறையினர் பள்ளி பேருந்தின் ஓட்டுநர் மற்றும் அவரது உதறியாளரை கைது செய்தனர். 

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறுமிக்கு பேருந்தின் ஓட்டுநர் கோவிந்தராஜ் (வயது 37) மற்றும் அவரது உதவியாளர் மாரிமுத்து (வயது 55) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும்., பேருந்தில் இருக்கும் மாணவர்கள் அனைவரும் சென்ற பின்னர் கடைசியாக வரும் சிறுமியை குறிவைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவமானது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in coimbatore a child rapped in school bus


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->