ராணிப்பேட்டை அருகே பரிதாபம்.! தனியார் பேருந்து மோதி திருமண நாளில் தம்பதி பலி...!
Husband wife killed in private bus collision in ranipet
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் பேருந்து மோதி திருமண நாளில் கணவன்-மனைவி உயிரிழந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (34). இவரது மனைவி சங்கீதா (29). இவர்களுக்கு கிஷோர் (3), தஷ்வந்த் (1) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று ஈஸ்வரன்-சங்கீதா தம்பதிக்கு திருமண நாள் என்பதால் காலை கிஷோரை பள்ளிக்கு அனுப்பிவிட்டு சங்கீதா, ஈஸ்வரன் மற்றும் குழந்தை தஸ்வந்த் ஆகிய மூன்று பேரும் மோட்டார் சைக்கிளில் புதுபாடி பச்சையம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
அப்பொழுது கடப்பந்தாங்கல் அருகே சென்ற போது செய்யாறு நோக்கி வந்து தனியார் பேருந்து எதிர்ப்பாராத விதமாக திடீரென இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஈஸ்வரன் மற்றும் சங்கீதா ஆகிய இரண்டு பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த குழந்தை தஷ்வந்த் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
மேலும் தனியார் பேருந்து ஓட்டுனரின் கவன குறைவு மற்றும் அதிவேகமாக வந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
Husband wife killed in private bus collision in ranipet