அடுத்தடுத்து குலுங்கிய சீனா, மியான்மர்: பீதியில் மக்கள்.!  - Seithipunal
Seithipunal


சீனா ஜிஜாங் நகரில் நேற்று இரவு 9:25 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாக இருப்பதாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

30 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் திபெத்தில் ஷிகாத்சே என்ற இடத்தில் இருந்து 146 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து ஒரு சில மணி நேரங்களில் அண்டை நாடான மியான்மரில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நள்ளிரவு 2 .15 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கம் 7 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்தும் பொருள் சேதம் குறைத்தும் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. சீனாவை தொடர்ந்து மியான்மரில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China and Myanmar earthquakes


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->