மகனைப் பிரிந்து வாழ முடியாமல்..! தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்..!!திருப்பூர் அருகே நெஞ்சை உருக்கும் சம்பவம்..!!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 49), இவரது மனைவியின் பெயர் சுதா ( வயது 45). இந்த தம்பதியருக்கு, நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல், கோயில் கோயிலாக வேண்டிக் கிடைத்தவன் இவர்களது மகன் நிஷாந்த் (வயத 18).

நிஷாந்த் பைக் வைத்திருந்தார். இவர் அவ்வப்போது, மிக அதிகமான வேகத்தில், பைக்கில் சென்று, பைக்கின் ஸ்பீடா மீட்டரை, செல்போன் கேமராவில் பதிவு செய்து, அவ்வப்போது, வாட்ஸ் அப்பில், தனது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பி வைப்பார்.

இதனைக் கண்டித்து, பலர் நிஷாந்திற்கு, அதிக வேகத்தில் பைக்கில் செல்லக் கூடாது, என்று அறிவுறித்தி உள்ளனர். ஆனால், அதையெல்லாம் நிஷாந்த் காது கொடுத்து கேட்பதில்லை. பெற்றோருக்கு ஒரே பிள்ளை என்பதால், செல்லம் அதிகம்.

நேற்று முன் தினம் மாலை, தன் நண்பன் கிருபாகரனுடன் (வயது 20) அவிநாசி பைபாஸ் சாலையில் அதிவேகமாக பைக்கில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக, தடுப்புச் சுவரில் பைக் மோதி, அந்த இடத்திலேயே, பைக்கில் சென்ற இருவரும் மரணம் அடைந்தனர்.

இவர்களது உடல், அவிநாசி, அரசு மருத்துவமனையில்  நேற்று முன் தினம் இரவில், வைக்கப் பட்டிருந்தது. மகன் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர், அவரது பெற்றோர். கடைசியாக பிணவறையில் சென்று தங்களது மகனைப் பார்த்து கதறி அழுதனர். மகனுக்கு, கடைசியாக முத்தம் கொடுத்தனர்.

பின், தங்கள் காருக்குள் சென்று இருவரும், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம், அங்கிருந்தவர்களைக் கண் கலங்கச் செய்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DAD AND MOM SUICIDE NEAR THIRUPOOR


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->