ஈரோடு அருகே சோகம் - சுற்றுலா பேருந்து கவிழ்ந்து கல்லூரி மாணவி பலி.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பயிலும் மாணவிகள் பேருந்தில் கல்விச்சுற்றுலா சென்றுள்ளனர். இந்தப் பேருந்து புறப்பட்டு 500 மீட்டர் தூரம் மட்டுமே சென்ற நிலையில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி ஸ்வேதா என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதைப்பார்த்த அந்த வழியாகச் சென்ற வான ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவரின் உடலையும், படுகாயமடைந்தவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் போலீசார் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலாவுக்கு புறப்பட்ட பேருந்து சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student died for tourist bus accident in erode


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->