சமூக நீதி பேசும் ஒருவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - சரமாரியாக கேள்வி எழுப்பிய முதல்வர்.!
chief minister mk stalin speech in dharmapuri
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை உறுதி செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் திமுகவின் தலைவரும், தமிழகத்தின் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் திருச்சியில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
அதன் பின்னர் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு தற்போது தர்மபுரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் பேசியதாவது:- சமூக நீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் சேர்ந்து போட்டியிடவுள்ளது. மேலும், பாமகவுக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
chief minister mk stalin speech in dharmapuri