சென்னை அருகே கோர விபத்து! 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து! சுக்குநூறாகிய லாரி! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே இன்று காலை கடலூரில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டு இருந்த அரசு பேருந்து மீது லாரி மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 41 பயணிகளில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பொதுமக்கள் பயணிகளை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

உடனடியாக செயல்பட்ட போலீசார் பள்ளத்தில் விழுந்த பேருந்தை கிரேன் மூலம் மீட்டனர். இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இந்த விபத்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே புலிப்பாக்கம் என்னும் இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. சாலையை கடக்க முயன்ற லாரி ஒன்று கடலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து மீது மோதியது. இதில் 25 அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai near Trouble 25-foot bus thrown into the ditch Larry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->