குட்கா வழக்கு.. மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை.!! கால அவகாசம் கோரும் சிபிஐ..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தடையை மீறி குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக குட்கா பொருட்கள் நிறுவன உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாச ராவ், உணவுப் பொருட்கள் பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் துறை அதிகாரி நவநீத கிருஷ்ணா பாண்டியன், சுகாதாரத் துறை அதிகாரி சிவகுமார் ஆகியோருக்கு எதிராக 2021 ஆம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது.

கடந்த 2021 ஆம் ஆண்டு இவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ரமணா, விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் உட்பட 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

அதில் பல்வேறு தவறுகள் இருப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டி அதனை திருத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. அதேபோன்று முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையின் பொழுது சிபிஐ வழக்கில் மேலும் சிலரிடம் விசாரணை நடத்த இருப்பதாகவும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும் அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை எனவும் இன்று நடைபெற்ற விசாரணையின் பொழுது சிபிஐ சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 17ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார். மத்திய அரசின் அனுமதி கிடைக்காத ஒரே காரணத்திற்காக மட்டுமே இந்த வழக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதே போன்று குட்கா வழக்கு கிட்டத்தட்ட 10 முறைக்கு மேல் மத்திய அரசின் அனுமதிக்காக மட்டுமே ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBI seeks time in Gutka case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->