ஈரோடு அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதி 3 பேர் பலி! - Seithipunal
Seithipunal


ஈரோடு அருகே சாலை விபத்தில் மூன்று பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தமிழரசன், மணிகண்டன் மற்றும் நாமக்கல் மாவட்டம் கூட்டபள்ளியை சேர்ந்தவர் தணிகைவேல். இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவை சேர்ந்த பார்த்திபன், அருண்குமார். இவர்கள் ஐந்து பேரும் ஈரோடு மூலப்பாளையத்தில் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் கரூரில் இருந்து ஈரோட்டிற்கு நேற்று 5 பேரும் காரில் வந்துள்ளனர். காரை தமிழரசன் ஓட்டி வந்துள்ளார். ஈரோடு அருகேயுள்ள சோலாரில் கார் வந்தபோது. ஈரோட்டில் இருந்து கரூர் சென்ற லாரியின் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் தமிழரசன், மணிகண்டன் மற்றும் தணிகைவேல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பார்த்திபன், அருண்குமார் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதனை கண்ட அப்பகுதியினர் காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தியுள்ளனர். 

மேலும் சம்பவ பகுதிக்கு வந்த மொடக்குறிச்சி காவலர்கள் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசுதலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறை விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

car accident in erodu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->