“இத்தனை வயதாகியும் கல்யாணம் ஆகலியே” – என்ற விரக்தி, வேகமாக மாறியது. அதனால் வந்த விளைவு….!
a young man taken a wrong decision
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நரிக்கல்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 38). நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.
சுய தொழில். கையில் புழங்குகிறது பணம். சமுதாயத்தில் அந்தஸ்து. இதெல்லாம் இருந்தும், இவருக்கு ஒரு குறை. இவருக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை.
அதற்காக, அவர் முயற்சி செய்யாமலும் இல்லை. பல இடங்களில் பெண் தேடினார். ஆனால், இவரது போதாத காலமோ, என்னவோ, இவருக்கு பெண்ணே கிடைக்கவில்லை.
இதனால், இத்தனை வயதாகியும், தனக்கு, இன்னும் திருமணம் ஆகிவில்லையே, என்ற மனக்குறை, இவரை வாட்டி வந்தது.
நண்பர்கள் சரவணனுக்கு ஆறுதல் கூறினார்கள்.
பழனி, இந்திரா நகரில் உள்ள காளிதாஸ் என்ற நண்பரைச் சந்திக்கச் சென்றார். மனது சரியில்லை, என்றும், அதனால், அன்று ஒரு நாள் மட்டும், காளிதாசின் பேக்கரி குடோனில், தங்கிக் கொள்ளப் போவதாகவும் கூறினார்.
காளிதாசும், பேக்கரி குடோனில், தன் நண்பருக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தந்து விட்டு, தன் வீட்டிற்கு கிளம்பி விட்டார்.
அவர் சென்ற பிறகு, தன் திட்டத்தை நிறைவேற்றத் துவங்கி விட்டார் சரவணன். பேக்கரி குடோன் மாடியில் உள்ள அறையில், துாக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த, பழனி டவுன் போலீசார், சரவணன் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
a young man taken a wrong decision