நெல்லையில்., காதலனுடன் ஓட்டம் பிடித்த மகள்.! வருந்திய தாயார் செய்ய துணிந்த காரியத்தால் நேர்ந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரை அடுத்துள்ள கரையிறுப்பு கணபதி மில் காலனியை சார்ந்தவர் கணேசன். இவரது மனைவியின் பெயர் சீதாலட்சுமி (43). இவர்களுக்கு மகள் ஒருவர் இருக்கிறார். 

இந்நிலையில்., இவரது மகளும் - அதே பகுதியை சார்ந்த வாலிபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். தங்களின் காதலை இவரது இல்லத்தில் தெரிவிக்கவே., இவரது இல்லத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. 

இதனையடுத்து., காதல் ஜோடி ஊரை விட்டு ஓட்டம் பிடிக்க முடிவு செய்து., சில நாட்களுக்கு முன்னதாக தனது காதலுடன் சென்றுள்ளார். இந்த விசயத்தை அறிந்த பெண்ணின் தாயார் சீதாலட்சுமி கடும் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். 

தனது மகளின் நிலையை எண்ணி வருத்தமடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து., தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில்., சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a woman attempt suicide in thirunelveli


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->